Friday, November 7, 2008

திரெங்கானு மாநிலமும் தமிழர்களும்

திரெங்கானு மாநில அரசின் தோற்றம் குறித்த ஆவணப்பட கலந்தாய்வில் ஈடுப்பட்டிருந்தப் பொழுது திரெங்கானு மாநிலத்தின் பெயர் 'திரங்கானி' என்ற இயற்பெயரில் இருந்தும் உருவாகியிருக்கலாமென்று சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர் ஒருவர் தம்முடைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.


மலைகளால் சூழப்பட்ட நிலமென்பதால் 'திரங்கானி' என்ற பெயர் அங்கு வாழ்ந்து வந்த பண்டைக்கால தமிழர்களால் வழங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இந்த கூற்றில் எத்துணை சதவிதம் உண்மையிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் அந்த ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் 'திரங்கானி' என்பது தமிழ்ச்சொல்தானா என்று கேள்வியெழுப்பியப் பொழுது, அந்தத் தகவல் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் ஆவணமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலை மலை சார்ந்த நிலத்தினை குறிஞ்சி நிலமென்று நம் இலக்கியங்கள் பகர்கின்ற வேளையில் இந்த 'திரங்கானி' சொல் தமிழ்ச்சொல்தானா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால், இதுப் பற்றி தகவலறிந்த மொழி அறிஞர்களும் சரித்திர ஆய்வாளர்களும் பின்னுட்டத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். இதன் வழி தவறான தகவல் நம் மாணவர்களை சென்றடைவதில் இருந்து தவிர்க்கலாம்.