Sunday, October 14, 2007

கெத்துப்பாட் (Ketupat)

மலேசியாவில் விழாக்காலங்களின் போது அந்தந்த இனத்தவரின் பிரபலமான உணவுகள் செய்து பரிமாறுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம். இப்போது முஸ்லிம்களின் நோன்பு பெருநாள். இவர்களின் பிரபலமான மூன்று உணவுகள் என்று சொன்னால் கெத்தூப்பாட் (Ketupat), லெமாங் (Lemang) மற்றும் டோடோல் (Dodol). இன்று இங்கே உங்களுக்கு கெத்துப்பாட் என்பது என்ன என்று அறிமுகப்படுத்தப்போகிறேன்.

கெத்துப்பாட் 5 வகை இருக்கின்றது. அவை: கெத்துப்பாட் நாசி, கெத்துப்பாட் பாலாஸ், கெத்துப்பாட் சாத்தே, கெத்துப்பாட் பசார் மற்றும் கெத்துப்பாட் பாவாங். மலேசியாவில் பிரபலமானது கெத்துப்பாட் நாசி மற்றும் கெத்துப்பாட் பாலாஸ். இதில் கெத்துப்பாட் பாலாள் வடக்கு மாநிலங்களான பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ்-இல்தான் பிரபலம்.

கெத்துப்பாட் நாசி:

இது சதுர வடிவத்தில் இருக்கும். தென்னைமர இலையில் சதுர வடிவத்தில் நெய்து அதில் அரிசியை போட்டு வேக வைப்பார்கள். இதன் வடிவத்தை நெய்வதுக்கு தனி பயிற்சி தேவை. சரியாக நெய்ய தவறினால், உள்ளே போட்ட அரிசி அதன் ஓட்டையில் வெளியாகிவிடும். இதன் முழு process 10 மணி நேரம் எடுக்கும். மலேசியாவில் ஊர் பகுதியில் உள்ளவர்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து செய்வார்கள். இப்படி செய்வதால் நேரத்தையும் சேமிக்க முடியும். அதே நேரத்தில் அண்டை அயலாருடன் நல்ல நட்புறவையும் அதிகரிக்க முடியும்.

ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தில் பட்டணத்தில் 10 மணி நேரம் என்பது அதிக நேரம் என்பதால், இவர்கள் நாசி இம்பிட் (Nasi impit) செய்வார்கள். கெத்துப்பாட் அரிசி ஏற்கனவே பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாம் வாங்கி அப்படியே கூக்கரில் வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

கெத்துப்பாட் பாலாஸ்:

பாலாஸ் என்பது பனை மரம். இந்த கெத்துப்பாட்டின் வெளிப்புரம் பனைமரத்து இலைகளினால் நெய்யப்பட்டதினால் கெத்துப்பாட் பாலாஸ் என்றழைக்கபடுகிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். கெத்துப்பாட் நாடிக்கும் இதுக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு இதில் பூலூட் அரிசி (Glutinous rice) உபயோகிப்பார்கள்.

இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன உபயோகிக்கிறது என்று கேட்பீர்கள். சரியா? மேலே சொல்லப்பட்ட இரண்டும் சைவம்தான். கெத்துப்பாட் என்றாலே கச்சான் கறி (Kuah kacang) செய்வார்கள். இதுவும் சைவ ஐட்டம்தான். அசைவம் உண்போருக்கு கெத்துப்பாட்டை நீங்க கோழி ரெண்டாங் (Rendang Ayam) உடன் சப்பிடுவது சாப்பிடலாம். என்னைப்பொருத்தவரை கெத்துப்பாட் – கோழி ரெண்டாங் ஒரு சூப்பர் காம்பினேஷன்.

Saturday, October 13, 2007

Soyuz விண்கலம் ISS-ஐ அடைந்தது


Soyuz TMA-11 விண்கலம் நேற்று இரவு 10.52க்கு அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (International Space Station, ISS) இணைந்தது. 48 மணி நேரமாக 700 தடவை பூமியை சுற்றி வந்தப்பின் சரியான தருணத்தில் இணைய Soyuzக்கு சுமார் 90 நிமிடங்கள் எடுத்தது.

அங்கிருந்து விண்வெளி வீரர்கள் மோஸ்கோ விண்வெளி மையத்துக்கு 10 நிமிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

மலேசிய முஸ்லிம்களுக்கு தன்னுடைய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிய டாக்டர் ஷேய்க் முஜாப்பார் தன்னுடைய 10 நாட்கள் பயணம் வெற்றி பெற மலேசியர்கள் வாழ்த்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
Soyuz (வட்ட்டதிற்குள்) ISS-இல் சேரும் காட்சி

நோன்பு பெருநாளை விண்வெளியில் கொண்டாடும் உலகின் முதன் விண்வெளி வீரர் என்ற சரித்திரத்தையும் இன்று படைக்கிறார் டார்டர் ஷேய்க் அவர்கள்.
பி.கு: மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 588, Angkasa 1-இல் உடனுக்குடன் செய்திகளை காணலாம்.

செலாமாட் ஹரி ராயா

செலாமாட் ஹரி ராயா!
Selamat Hari Raya!



ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு எடுத்து ஷாவால் முதல் நாளில் பண்டிகை கொண்டாட விருக்கின்றனர் நம் முஸ்லிம் நண்பர்கள். மலாய் மற்றும் முஸ்லிம் நண்பர்களுக்கு ஜில்லென்று ஒரு மலேசியா நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. Selamat Hari Raya.
மலேசியாவில் பிரபலமான பெருநாள் பாடல்களில் ஒன்று இங்கு உங்களுக்கு காட்டுகிறோம். கரோக்கே ஸ்டைலில் கீழே பாடல் வரியும் வரும். அந்த பாடகியை சைட் அடிக்காமல் பாடிப்பார்க்கவும் வாழ்த்துக்கள்.



பி.கு: பாடல் பிடித்திருந்தால், பாடல் வரியின் விளக்கங்கள் வேண்டும் என்று நீங்கள் கருதினால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அதை நான் தமிழில் மொழிப்பெயர்க்க முயற்சி செய்கிறேன்.

Friday, September 7, 2007

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 5

சத்யா டீச்சர் மேஜைக்கு வருகிறார்.

"செக்கு, இன்றைக்கு வார நாட்கள் எப்படி மலாயில் உச்சரிப்பது என்று சொல்லி தருகிறீர்களா?"

"கண்டிப்பாக சத்யா. மாணவர்களே, இன்று எப்படி வார நாட்களை மலாயில் உச்சரிப்பது என்று பார்ப்போமா?"

"'இன்று என்ன கிழமை?' என்பதை எப்படி மலாயில் உச்சரிப்பது என்று யாருக்காவது தெரியுமா?"

வகுப்பிலுள்ள அனைவரும் மௌனம் காக்கின்றனர்.

"சரி, நானே சொல்கிறேன்."

இன்று - என்ன - கிழமை
Hari ini - apa - hari

"Hari ini hari apa? [ ஹாரி இனி ஹாரி ஆப்பா?]"

"ஒவ்வொரு நாளையும் மலாயில் எப்படி சொல்வது என்று பார்ப்போம் வாங்க"

ஞாயிறு - Ahad - ஆஹாட்
திங்கள் - Isnin - இஸ்னின்
செவ்வாய் - Selasa - செலாசா
புதன் - Rabu - ராபு
வியாழன் - Khamis - காமிஸ்
வெள்ளி - Jumaat - ஜுமா-ஆட்
சனி - Sabtu - சப்து

"இன்று வெள்ளிக்கிழமை என்பது மலாயில் எப்படி சொல்வது? இளா, நீ சொல்லு பார்ப்போம்?"

"ம்ம்ம்.. Hari ini hari jumaat [ஹாரி இனி ஹாரி ஜுமா-ஆட்]"

"சரியான பதில் இளா. வெல்டன்."

"ஞாயிற்று கிழமையை hari minggu [ஹாரி மிங்கு] என்றும் அழைக்கலாம்."

"ஏன் ஞாயிறுக்கு மட்டும் இந்த ஸ்பெஷலான பெயர் செக்கு?"

"ஞாயிறு வாரத்தின் முதன் நாள். அது மட்டுமில்லாமல் ஞாயிறு என்பது விடுமுறைநாள். அதற்க்குதான் இந்த ஸ்பெஷல் பெயர்."

"பிறந்த நாள் என்பதை hari jadi [ஹாரி ஜாடி] என்றைக்கப்படும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று நீங்கள் யாருக்காவது சொல்ல வேண்டும் என்றால் Selamat Hari Jadi [செலாமாட் ஹாரி ஜாடி] என்று சொல்லலாம்"

"சுதந்திர தினம் என்பதை எப்படி சொல்வது செக்கு?"

"சுதந்திரம் என்பது மலாயில் மெர்டேக்கா என்று சொல்வார்கள். சுதந்திர தினம் என்றால் Hari Kemerdekaan [ஹாரி கெமெர்டேக்கா-ஆன்] என்று சொல்வோம். Hari Kebangsaan [ஹாரி கெபாங்சா-ஆன்] என்றும் சொல்லலாம்."

"வேறு எதாவது கேள்வி இருக்கிறதா மாணவர்களே?"

"செக்கு, பள்ளி விடுமுறை நாள் என்பதை எப்படி சொல்வது"

"ம்ம்.. நல்ல கேள்விதான் விடுமுறை என்பது cuti [ச்சூத்தி]. விடுமுறை நாள் என்றால் hari cuti [ஹாரி ச்சூத்தி]. பள்ளி விடுமுறை நாள் என்றால் hari cuti sekolah [ஹாரி ச்சூத்தி செக்கோலா]. செக்கோலா என்றால் பள்ளிகூடம் என்று பொருள்."

"செக்கு, எப்போ எங்களுக்கு ச்சூத்தி செக்கோலா?" சிவா கைத்தூக்கி கேட்கிறார்.

"க்ளாஸ் ஆரம்பிச்சு இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதுக்குள்ள உனக்கு பள்ளி விடுமுறை வேணுமா? பேசாமல் உட்கார்ந்து பாடத்தை கவனி சிவா"

"தினமும் என்பதை tiap-tiap hari (தியாப்-தியாப் ஹாரி) என்று சொல்ல வேண்டும். நாளை என்பது Esok (ஏசோக்). நேற்று என்பது semalam (செமாலாம்) என்றும் சொல்ல வேண்டும்"

"சரி, இன்று நிறைய படிச்சாச்சு.இன்று என்ன புதிதாக கற்றுக்கொண்டோம் என்று பார்ப்போமா?"

ஞாயிறு - Ahad - ஆஹாட்
திங்கள் - Isnin - இஸ்னின்
செவ்வாய் - Selasa - செலாசா
புதன் - Rabu - ராபு
வியாழன் - Khamis - காமிஸ்
வெள்ளி - Jumaat - ஜுமா-ஆட்
சனி - Sabtu - சப்து
இன்று என்ன நாள்? - Hari ini hari apa? - ஹாரி இனி ஹாரி ஆப்பா?
இன்று வெள்ளிகிழமை - Hari ini hari jumaat - ஹாரி இனி ஹாரி ஜுமா-ஆட்
பிறந்த நாள் - hari jadi - ஹாரி ஜாடி
சுதந்திர தினம் - Hari Kemerdekaan - ஹாரி கெமெர்டேக்கா-ஆன்
பள்ளி விடுமுறை நாள் - hari cuti sekolah - ஹாரி ச்சூத்தி செக்கோலா
தினமும் - tiap-tiap hari - தியாப்-தியாப் ஹாரி
நாளை - Esok - ஏசோக்
நேற்று - semalam - செமாலாம்

"செக்கு, நாங்கள் கிளம்பலாமா?"

"என்கே கிளம்புறீங்க? இன்னைக்கு உங்களுக்கு நான் வீட்டுப்பாடம் தர போகிறேன். உங்கள் விடையை பின்னூட்டமாக போடுங்கள். கேள்விகள் இதுதான்:"

இந்த வாக்கியங்களை மலாய் மொழிக்கு மாற்றுக:

1- உன் பிறந்த நாள் எப்பொழுது?
2- நேற்று நான் கடைக்கு சென்றேன்
3- போன சனிக்கிழமையன்று நான் மூன்று பழங்கள் சாப்பிட்டேன்.

"நீங்கள் மலாய் மொழி எந்த அளவுக்கு கற்று இருக்கீர்கள் என்று இந்த பதில்களை வைத்துதான் என்னால் உங்களை மதிப்பிட முடியும். அதனால், மறவாமல் உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் அனுப்பவும். அது மட்டுமில்லை. அடுத்த வகுப்பில் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதையும் பின்னூட்டம் வழியாக தெரிவித்தால், அடுத்த பகுதியில் அதையும் கற்றுக் கொடுப்பேன். ஜும்ப்பா லாகி மாணவர்களே."

'தெரிமா காசே செக்கு."

Monday, September 3, 2007

மலேசியா 50

மலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று சோதிக்கலாமா? உங்களுக்கு இதில் எத்தனை வகை தெரியும்? பார்த்திருக்கிறீர்கள்? ருசித்திருக்கிறீர்கள்?

நீங்கள் மலேசியா வந்தால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து, ருசித்து, அனுபவிக்க தவறாதீர்கள்!

உணவு

1- நாசி லெமாக் (Nasi Lemak)
2- நாசி கண்டார் (Nasi Kandar)
3- ரொட்டி சானாய் - (Roti Canai)
4- தே தாரேக் (Teh Tarik)
5- காஜாங் சாத்தே (Kajang Satay)
6- ரம்லி பர்கர் (Ramly Burger)
7- சார் கொய் தியாவ் (Char Koay Teow)
8- ஏ.பி.சி - (ABC - Air Batu Campur)
9- ரோஜாக் - (Rojak)
10- யீ சாங் (Yee Sang)

உச்சரிப்பு (தினமும் அதிகம் பயன்படுத்துவது)

11- லா (Lah)
12- மச்சான் (Machan)
13- அலாமாக் (Alamak)
14- தா பாவ் (Ta Pau)
15- சின் சாய் (Cin Cai)
16- அய்யோ (Aiyo)
17- மலேசியா போல்லே (Malaysia Boleh)
18- யாம் சேங் (Yam Seng)

பிரமுகர்கள்

19- துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman)
20- துன் டாக்டர் மகாதீர் முகமது (Tun Dr Mahathir Muhamad)
21- தான் ஸ்ரீ பி.ரம்லீ (Tan Sri P.Ramlee)
22- சூடீர்மான் (Sudirman)
23- மாட் ரெம்பிட் (Mat Rempit)
24- ஆ லோங் (Ah Long)
25- லாட் (Lat)

கட்டிடங்கள் & இடங்கள்

26- கெந்திங் ஹைக்லண்ட்ஸ் (Genting Highlands)
27- 24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ் (24 Hour Mamak Stalls)
28- பத்துமலை (Batu Caves)
29- பெத்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Petronas Twin Tower)
30- பினாங்கு பாலம் (Penang Bridge)
31- புத்ராஜயா (Putrajaya)
32- கினாபாலு மலை (Mount Kinabalu)
33- சவ் கிட் ரோடு (Chow Kit Road)
34- குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் ( KL International Airport)
35- மலாக்கா (Malacca)
36- டத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka)
37- இரவு சந்தை (Pasar Malam)

கலாச்சாரம் & மற்றவை

38- ப்ரோட்டோன் (Proton)
39- பாலீக் கம்போங் (Balik Kampung)
40- திறந்த வீடு உபசரிப்பு (Open House)
41- பாஜூ கூரூங் (Baju Kurung)
42- நீண்ட வீடு (Long House)
43- பாபா & ஞோஞ்ஞா (Baba & Nyonya)
44- மலேசியரின் விருந்தோம்பல் (Malaysian Hospitality)
45- "மலேசியன் நேரம்" - "Malaysian Time"
46- மை காட் - MyKad
47- 2020 தொலைநோக்கு திட்டம் (Vision 2020)
48- பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)
49- வாயாங் கூலிட் (Wayang Kulit)
50- பல வர்ணங்களில் அங் பாவ் ( Ang Pow in many colours) - சீனர்கள் (சிவப்பு), மலாய்க்காரர்கள் (பச்சை), இந்தியர்கள் (மஞ்சள்)

Thursday, August 30, 2007

சுதந்திர தின கொண்டாட்டங்கள்

ாளை நடைபெறவிருக்கும் மலேசியாவின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்க்க விரும்பும் பொது மக்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச பேருந்துகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சி நடக்கும் இடமும்,இலவச பேருந்து சேவை கிடைக்கும் நேரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி:சுதந்திர தினத்தின் முதல் நாள்(Merdeka eve celebration)
இடம்:டாத்தாரான் மெர்டேக்கா(dataran Merdeka)
நேரம்:6.30PM- 2Am
தேதி:30 ஆகஸ்ட்-31ஆகஸ்ட்
------------------------------

---------------
சுதந்திர தின அணிவகுப்பு
டாத்தாரான் மெர்டேக்கா(dataran Merdeka)
6.30AM-2PM
தேதி:31 ஆகஸ்ட்
---------------------------------------------
சுதந்திர தின கொண்டாட்டம்(Merdeka Mammoth Celebration)
மேர்டேக்கா அரங்கம்(stadium merdeka)
நேரம்:6.30PM-2AM
தேதி:31ஆகஸ்ட்-1செப்டம்பர்
---------------------------------------------
இந்த இலவச பேருந்து சேவைகள் 5 இடங்களிலிருந்து் கிடைக்கும்.இந்த இடங்களில் மொத்தம் 3500 வாகனம் நிறுத்தும் இட வசதியும் உண்டு.வாகன ஒட்டுனர்கள் இங்கே வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு,இலவச பேருந்து வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
இலவசப் பேருந்து வசதி கிடைக்கும் இடங்கள்:

Zone A covers National Museum & KL Sentral

Zone B - Inland Revenue Board Building, Federal Territory Mosque Complex, National Archieves

Zone C - Taman Tasik Perdana, national Mosque, Kompleks Pusat Islam, National Planetarium, Tun Abdul Razak Memorial

Zone D - National Arts Heritage Avademy, Bukit Perdana Government Complex, Public Works Ministry Complex

Zone E - Dewan Bahasa & Pustaka building, Institute of Diplomacy and Foreign Relations

பொதுமக்கள் வானவேடிக்கைகளைக் கண்டுகளிக்க நாளை கோலாலம்பூர் கோபுரத்தின்(KL tower) பார்வையார்கள் மேடை(viewing platform) மற்றும் அங்குள்ள உணவகங்களும் இரவு 1 மணி வரையிலும் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

Rapid KL-யின் பேருந்து மற்றும் இரயில் சேவை நேரங்களையும் சுதந்திர தின கொண்டாட்டத்ததை முன்னிட்டு நீட்டித்துள்ளனர்.நீட்டிக்கப்பட சேவைகளின் விபரங்கள் பின்வருமாறு:

இரயில் சேவைகள் :
5 Kelana Jaya வழியில் உள்ள நிலையங்கள் - Kelana Jaya, KL Sentral, Pasar Seni, Masjid Jamek மற்றும் KLCCயின் காலை மணி 2.30 வரையில் அவர்களின் சேவையை நீட்டித்துள்ளனர்.


Bangsar, Dang Wangi, Kampung Baru மற்றும் Ampang ஆகிய நிலையங்கள் இரவு 2 மணி வரை இயங்கும்.

Ampang நிலைய வழியில் உள்ள Hang Tuah, Masjid Jamek மற்றும் Bandaraya நிலையங்களும் மணி 2.30 வரை இயங்கும்.

Ampang மற்றும் kelana jaya வழியில் உள்ள மற்ற இரயில் நிலையங்கள் காலை 12.45க்கு மூடப்ப்படும்.


பேருந்து சேவைகள்:
நகர மையத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் காலை மணி 3 வரையில் தங்கள் சேவைகளை நீடித்து உள்ளன.இந்த பேருந்துகள் நேராக நகரத்திற்கும்(Bukit Bintang, Titiwangsa Hub மற்றும் Pasaramakota) அல்லது இரயில் நிலையங்களுக்கும்(KLCC, Taman Melati, Wangsa Maju, Setiawangsa, Kelana jaya மற்றும் KL Sentral செல்லும்.நகர மையங்களுக்குச் செல்லும் சாலைகள் மாலை 6 மணிக்கு பிறகு அடைக்கப்படுவதால் இந்த இடங்களுக்கு மட்டுமே பேருந்து செல்ல முடியும்.

இதற்கிடையில், யு86 சாலையில், பந்தார் உத்தாமாவிலிருந்து மெட்ரோ ப்ரிமா செல்லும் பாதை , இரவு நேர கொள்வனவு செய்ய ஒன் உதாமா, தி கர்வு மற்றும், இகானோ பவர் செண்டர், செல்பவர்களுக்காக நள்ளிரவு 12.30 வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது..


மேல் விபரங்களுக்கு
www.rapidkl.com.my

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Friday, August 24, 2007

மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்

"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது? ஏன் இடது பக்கம் நீல வர்ணம்? ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன? நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும்? ஆனால், ஏன் இந்த நட்சத்திரத்துக்கு மட்டும் 10க்கு மேற்ப்பட்ட கால்கள்?"

-இது ஒரு நண்பர் ஜி-டால்க்கில் என்னிடம் கேட்ட கேள்வி.


மலேசிய கொடியில் இருக்கும் வர்ணங்களைப் பற்றியும் அதில் இருக்கும் அந்த நிலா, நட்சத்திரம், கோடுகள் பற்றியும் வினவினார். அவர் கேள்விகளுக்கு முழு விளக்கம் கொடுக்க வேண்டியது ஒரு மலேசியனான என் கடமை.

1949-இல் முதன் முறையாக தேசிய கொடி வடிவமைக்கும் போட்டி நடைப்பெற்றது. அதில் மூன்று மட்டுமே கடைசி சுற்றுக்கு தேர்வாகின. முதல் கொடியில் இரண்டு கெரிஸ்கல் (keris) [இது மலாய்காரர்களின் பாரம்பரிய ஆயுதம்] கொடியின் நடுவில் வைக்கப்பட்டு அதை சுற்றி 5 கால் கொண்ட நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தது. இரண்டாவது கொடி ஏறக்குறைய முதல் கொடியை போலவே இருந்தது. ஆனால், அதில் இரண்டு வட்டங்கள் கொண்ட 11 கால் நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கொடியில் 11 நீலம் மற்றும் வெள்ளை சமமான கோடுகள் வரையப்படிருந்தன. நடுவில் தேய்பிறை நிலா ஒன்று பெரிதாக வரையப்படிருந்தது.

நவம்பர் 29 1949-இல் மூன்றாவது வடிவமைப்பு கொடி நாட்டின் தேசிய கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் அந்த வடிவமைப்பு மேலும் சில மாறுதல்களை கண்டது.

நீலம்-வெள்ளை கோடுகள் சிவப்பு-வெள்ளை கோடுகளாக வர்ண மாற்றம் கண்டன. கொடியின் இடது புறம், நீல வர்ணத்தால் நிறைக்கப்பட்டது. அந்த நீல பெட்டகத்தில் மஞ்சள் நிறத்தில் தேய்பிறை நிலாவும் 11 கால் கொண்ட நட்சத்திரமும் வரையப்பட்டது. 11 கால் நட்சத்திரம் 11 மலாய் அரசபையை குறிக்கின்றது.

புதிய மேம்படுத்தப்பட்ட தேசிய கொடி முதன் முறையாக 1950, மே 26-இல் பிரிட்டீஷ் ஹை கமிஷனில் கொடி ஏற்றும் திருவிழாவில் ஏற்றப்பட்டது. ஆனாலும், அது இப்பொழுது இருக்கும் ஜாலூர் கெமிலாங் இல்லை.

1963-இல் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயுவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் மலாயா மலேசியா என்று பெயர் மாற்றம் கண்டது. அதே நேரத்தில் தேசிய கொடியில் சில மாறுதல்கள் அவசியமாக பட்டது.

11 கால் கொண்ட நட்சத்திரம் 14 கால்களாக மாறியது. 11 சிவப்பு-வெள்ளை கோடும் 14 ஆக உருமாறியது. 11 மலாய் அரசபை மற்றும் மூன்று புதிய அரசபையின் எண்ணிக்கையை குறிக்கின்றது.

இந்த புதிய தேசிய கொடி 1963-ஆம் வருடம் செப்டம்பர் 16-இல் முதன் முறையாக ஏற்றப்பட்டது. சிங்கப்பூர் 1965-ஆம் வருடம் மலேசியாவை விட்டு வெளியேறி தனி நாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14, 13-ஆக மாற வில்லை. பிற்காலத்தில் அந்த எக்ஸ்ட்ரா ஒன்று மத்திய அரசாங்கமய் குறிப்பிட பட்டது.

இன்று எங்கள் தேசிய கொடியில் 14 கால் கொண்ட நட்சத்திரம் இருக்கின்றது. இடப்புறத்தில் உள்ள கருநீல வர்ண பெட்டகம் முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது. இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதை குறிக்கின்றது. வெள்ளை வர்ணம் மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும் மனங்களையும் குறீக்கின்றது. சவால்களை சந்திக்கும் தைரியத்தை குறிப்பது சிவப்பு வர்ணம். மஞ்சள் வர்ணம் அரசர்களையும், அவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் குறிக்கின்றது. மலேசியாவின் ஆட்சி இஸ்லாமிய முறைபடி நடக்கின்றதெனும், இள்லாமியம் மலேசியாவின் official religion என்றும் குறிக்கின்றது தேய்பிறை.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2001-ஆம் ஆண்டில் தேசிய கொடியை ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) என்று பெயர் சூட்டினார். ஜாலூர் கெமிலாங் என்றால் Stripes of Glory என்று பொருள்.

ஜாலூர் கெமிலாங் மலேசிய திருநாட்டின் வெள்ளியையும் மேன்மையையும் குறீக்கும் ஒரு அடையாளம். ஆகவே, மலேசியர்களே! நமது வீட்டிலும் ஜாலூர் கெமிலாங்கை பறக்க விடுவோம், வாருங்கள்....

Tuesday, August 21, 2007

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4

'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லை

பள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்க!

அதான் திரும்ப வந்துட்டேன்ல. க்லாஸ் மஜாவா ஆரம்பிச்சிடலாம். :-)

"செலாமாட் பாகி மூரிட்-மூரிட்"

"ஹய்யா.. டீச்சர் வந்துட்டாங்க.."

"என்ன க்ளாஸ்ல மொத்தமே அஞ்சு பேர்தான் இருக்கீங்க போல??"

"செக்கு, நல்லா பாருங்க.. நாங்க மொத்தம் செப்புலோ பேர் இருக்கோம்", கார்த்திக் எழுந்திரிச்சு சொல்கிறார்.

"ஆஹா.. பல நாள் வகுப்புக்கு நான் வரலைன்னாலும், நீங்க சரியா பாடத்தை படிச்சிட்டு இருக்கீங்க போல? கூட் கூட்"

"மாணவர்களே, இன்றைய பாடத்துக்கு போகலாமா?"

சிவா மேஜையில் சாய்ந்துக்கொண்டே, "வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க! நடத்துங்க நடத்துங்க.."

"இன்றைக்கு நாம் வர்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்"

வெள்ளை - Putih - பூதே
மஞ்சள் - Kuning - கூனிங்
சிவப்பு - Merah - மேரா
ஊதா - Ungu - உங்கு
நீலம் - Biru - பீரு
பச்சை - Hijau - ஹீஜாவ்
மயிலை (Grey) - Kelabu - கெலாபு
கருப்பு - Hitam - ஹீத்தாம்

கதிர் எழுந்து, "செக்கு, 'அந்த பூனையின் நிறம் கருப்பு' என்பதை எப்படி சொல்றது?

அந்த - பூனையின் - நிறம் - கருப்பு
Itu - kucing - warna - hitam

"Kucing itu berwarna hitam [கூச்சிங் இத்து பெர்வர்ண ஹீத்தாம்]. மலாயில் மொழி மாற்றம் செய்யும்பொழுது வார்த்தைகளின் இடம் மாறுப்படும். சில இடங்களில் imbuhan [இம்பூஹான்] என்றழைக்கப்ப்டும் இலக்கியத்தை சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வாக்கியத்தில் 'ber' [பெர்] என்ற இம்பூஹான் சேர்க்கப்பட்டிருக்கிறது."

"செக்கு, பழுப்பு வர்ணத்தை எப்படி மலாய் மொழியில் சொல்வது?"

"பழுப்பு என்பது சாக்லேட்டின் வர்ணம் அல்லவா? அதனால் அந்த் சாக்லேட்டின் பெயரையே உபயோகிக்கப்படுகிறது. பழுப்பை மலாயில் Coklet [சொக்லேட்] என்று அழைப்பார்கள். ஆரஞ்சு என்ற வர்ணமும் ஆரஞ்சு பழத்தின் பெயரையே கொண்டழைக்கப்படுகிறது. ஆரஞ்சை மலாயில் Oren [ஓரேன்] என்று அழைப்பார்கள்"

"செக்கு, கருநீலம், கருஞ்சிவப்பு, கரும்பச்சைன்னு தமிழில் இருக்கே! மலாயிலும் அப்படி இருக்கிறதா?" சுமதி கேட்டார்.

"கண்டிப்பாக இருக்கு. இந்த கரும் வர்ணங்களுக்கு Tua [துவா] என்று வர்ணத்தின் பின்னால் சேர்க்க வேண்டும். துவா என்றால் முதியது என்று பொருள். நீங்க கருநீலம் என்று சொல்ல வேண்டும் என்றால் merah tua [மேரா துவா] என்று சொல்ல வேண்டும்"

"கரும்பச்சை என்றால் hijau tua [ஹீஜாவ் துவா], கருமஞ்சள் என்றால் kuning tua [ கூனிங் துவா] என்பது சரிதானே செக்கு?" என்று பொன்ஸ் கைத்தூக்கி சொல்கிறார்.

"பொன்ஸ், சரியாக சொன்னாய். கூட்."

"செக்கு, பிங்க் என்பது மலாயில் பிங்க் என்றுதான் சொல்வார்களா?" கேள்விக்குறியுடன் கேட்கிறார் காயத்ரி.

"இல்லை காயத்ரி. பிங்க் என்பதை merah muda [மேரா மூடா] அல்லது merah jambu [மேரா ஜம்பு] என்று சொல்லலாம். மூடா என்றால் இளமை என்று பொருள். மேரா ஜம்பு என்பதே அதிகம் உபஓகிக்கும் வார்த்தை. ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். அதனின் வெளித்தோற்றம் பிங்க் வர்ணத்தில்தான் இருக்கும். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு என்றழைக்கப்படுகிறது."

"பிங்க் வர்ணத்துக்கு இப்படி ஒரு சரித்திரமா? ஹீஹீஹீ" G3 சிரிக்கிறார்.

"சொல்ல மறந்துவிட்டேனே மாணவர்களே. பழுப்பு வர்ணத்துக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. Perang [பேராங்] என்றும் சொல்லலாம். ஆனால், இந்த வர்த்தையை நீங்கள் சொல்லும்பொழுது உங்கள் உச்சரிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெராங் என்றால் போர் என்று பொருள். பேராங் என்றால்தான் பழுப்பு வர்ணம் என்று பொருள். உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டுமென்றால் சொக்லேட் என்றே சொல்லுங்கள். சரியா?"

"சரி செக்கு"

"சரி, இன்றைய பாடம் இத்தோடு முடிவடைகிறது. இன்றைய வகுப்பு வர்ணமயமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்"

"தெரிமா காசே செக்கு. ஜும்ப்பா லாகி"

-----------------------------------------
இன்றைய பாடம்:

வெள்ளை - Putih - பூதே
மஞ்சள் - Kuning - கூனிங்
சிவப்பு - Merah - மேரா
ஊதா - Ungu - உங்கு
நீலம் - Biru - பீரு
பச்சை - Hijau - ஹீஜாவ்
மயிலை (Grey) - Kelabu - கெலாபு
கருப்பு - Hitam - ஹீத்தாம்
பழுப்பு - Coklet / Perang - சொக்லேட் / பேராங்
ஆரஞ்சு - Oren -ஓரேன்
பிங்க் - Merah Jambu - மேரா ஜம்பு

Sunday, August 19, 2007

மலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்


ஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு சுதந்திரப் பொன்விழாவையொட்டி 73.3 மீட்டர் நீளமும் 41.4 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி வடிவமைப்புக் கோலத்தை அமைத்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

இந்த தேசிய தினக் கோலத்தை வடிவமைப்பதில் 2000க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கோலம் மலேசியாவின் மிகப்பெரிய கோலமாகக் கருதப்படுகிறது. ஏ.சி.எஸ் பள்ளி மைதானத்தில் நேற்று காலை 9.00 மணி அளவில் பொது மக்கள் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. பேரா மந்திரி புசாரின் பிரதிநிதியாக உயர்கல்வி இலாகாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் அத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். பள்ளி மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் அவர்களின் திறனையும் வெளிக்கொணரும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்படும் இதுப்போன்ற சாதனைகள் மூலம் நாட்டின் மீது மாணவர்களிடையே சிறந்த சிந்தனையை விதைக்கலாம்.


இதனை தொடர்ந்து ஜெராண்டூட் ஆரம்ப தமிழ் பள்ளியின் 140 மாணவர்கள் 50-ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு மூன்றே மணி நேரத்தில் கோலம் போட்டிருக்கின்றனர்.


சுமார் 2000 கிலோ தேங்காய் சக்கையை கொண்டு 13 மீட்டர் ஞ் 12 மீட்டர் கோலத்தை உருவாக்கியுள்ளனர் இந்த பன்னிரெண்டு வயதுக்கும் குறைவான மாணவர்கள்.

Friday, August 17, 2007

50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை

மலேசிய நாட்டின் 50-ஆவது பொன்விழா சுதந்திர தினத்தையொட்டி இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமது படாவி, முன்னாள் பிரதமர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது, துன் ஹூசேன் ஓன், துன் அப்துல் ரசாக், சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் நாட்டிற்கு அர்ப்பண உணர்வுடன் வழங்கிய வழங்கிக் கொண்டிருக்கும் அர்ப்பணமிக்க பங்கேற்பிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 10 மணி நேரம் என 50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை நடத்த மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார் குளுவாங் கல்வி மைய முதல்வர் டாக்டர் அ.இளந்தேவன்.

இந்த துணிகர முயற்சி வெள்ளிக்கிழமை 17-8-2007 மாலை 3.00 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 19-8-2007 மாலை 5.00 மணிக்கு நிறைவேறும். எண் 32, ஜாலான் இள்மாயில், விஸ்மா சோமசன்மா, குளுவாங் எனும் முகவரியில் உள்ள அவரின் குளுவாங் கல்வி மையத்தில் தொடங்கும். இந்நிகழ்ச்சியை ம.இ.கா ஜொகூர் மாநில தொடர்புக்குழுச் செயலாளர் செனட்டர் எம்.எம்.சாமி தொடக்கி வைப்பார். இச்சாதனையில் 1,300 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.

ஏற்கனவே 2005-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்தாற்போல் 24 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி மலேசிய சாதனை புத்தக வரலாற்றில் தமது பெயரை பதிவு செய்த அவர் 2005 டிசம்பரில் இடைவிடாது 88 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி கின்னஸ் உலக சாதனை முத்திரையையும் பதித்த டாக்டர் அ.இளந்தேவன் தாம் பிறந்தமண்ணின் சுதந்திர தின விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Wednesday, August 15, 2007

கொண்டாடலாம் வாங்க..

அட.. என்ன கொண்டாடலாம்ன்னு நான் சொல்லவே இல்லையா? மலேசியாவின் சுதந்திர நாள் வருதுல்ல.. எப்போதுன்னு கேட்குறீங்களா? 31 ஆகஸ்ட்டுதான் மலேசியாவின் சுதந்திர தினம்.


இந்த வருடம் ஸ்பெஷலான வருடம். மலேசியா சுதந்திரம் வாங்கி 50 வருடம் பூர்த்தியாகிறது. சாதாரணமாகவே சுதந்திர தினத்துக்கு 15 நாட்கள் முன்னிலிருந்தே கொண்ட்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடும். வீடு, அலுவலகம், ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ், கார், லாரி, மோட்டர், சைக்கிள் என எல்லா இடத்திலும் மலேசிய கொடி கம்பீரமாக பறக்க விடப்பட்டிருக்கும்.

இந்த வருடம் ஆகஸ்ட் ஒன்றிலிருந்தே ஆங்காங்கே மலேசிய கொடி கம்பீரமாக காற்றில் பறப்பதை பார்க்க மிக பெருமையாக இருக்கின்றது. இந்த வருட சுதந்திர தினத்துக்காக பல நிகழ்ச்சிகள் நடக்க விருக்கின்றன. மலேசியாவில் உள்ளவர்கள் இந்த விழாக்களுக்கு தாராளமாக போகலாம். வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கும் கவலை இல்லை. இந்த வருடம் Tahun Melawat Malaysia 2007(மலேசியாவைச் சுற்றி பார்க்கும் ஆண்டு) என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. நீங்கள் மலேசியாவை சுற்றிப் பார்க்க தாராளமாக வரலாம். சுற்றுப் பயணிகளுக்கு பல வசதிகள் செய்யப்பட்டிருகின்றது. விமான டிக்கெட், தங்கும் வசதி, மற்றும் சுற்றுலா தளங்களின் நுழைவு சீட்டுகளின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் மலேசியாவை சுற்றிப்பார்க்க வாருங்கள். சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்னன்னு கேட்குறீர்களா? இதோ:

1- ஜூலை 2007 - 1940 - 1957 மெர்டேக்கா (சுதந்திர) புத்தக வெளியீட்டு விழா

சுதந்திரத்துக்காக போராட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பல அரிய படங்களும் இந்த சேமிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

2- ஜூலை 2007 - டாத்தாரான் மெர்டேக்கா சுற்றுப்புறம் வரலாற்று சிறப்புமிக்க தளமாக அறிவிக்கப்படும் விழா.

டாத்தாரான் மெர்டேக்கா என்பது வரலாற்று சிறப்பு மிக்க இடமாக திகழ்கிறது. இப்போது அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களும் சேர்க்கப்பட்டு பேணிக்காக்கப்படுகிறது.

3- 19 ஜூலை 2007 - 50 வருட சுதந்திர தின நாணயம் வெளியீட்டு விழா

50-ஆவது வருடத்திற்க்காக சிறப்பாக ஒரு நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. இது லிமிடட் எடிஷன் மட்டும்தான். நாணயம் சேமித்து வைப்பவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நாணயத்தை பெறுங்கள்.

4- சுதந்திர தின கொண்டாட்ட துவக்க விழா

ஆகஸ்ட் 17-ஆம் திகதி மலேசிய பிரதமரால் புத்ராஜெயாவில் துவக்கி விடப்படும். அன்றைய தினத்தில் மலேசியா பாரம்பரிய நடனங்கள் சில அரங்கேற்றப்படும். அதன் பிறகு ஜாலுர் கெமிலாங் (Jalur Gemilang) என்றழைக்கப்படும் மலேசிய கொடியை அங்கே உள்ள ஒவ்வொரு காரிலும் கட்டுவார்.

மலேசியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் இதுக்கு ஆதரவு தந்து, அவங்களால் முடிந்த சில நன்கொடைகள் செய்துள்ளனர். அவர்களும் தங்கள் பணியாளர்களுக்கு இலவசமாக ஜாலுர் கெமிலாங் தருவார்கள். இங்கே என்ன ஒரு சந்தோஷமான விஷயமென்றால், பலர் அந்த கொடியை எதிர்ப்பார்க்காமல், அவர்களே சொந்த செலவில் ஜாலுர் கெமிலாங் வாங்கி கட்டியிருப்பதுதான். சுதந்திர தினம் என்பது அவர்களுள் ஊறியிருப்பது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்.

5- 50 வருட சுதந்திர மலேசியா கண்காட்சி

1957 முதல் 2007 வரை, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசியாவின் மாறுதல்களை மிக துல்லியமாக விளக்கப்படும் ஒரு கண்காட்சி. சுற்றுப்பயணிகளுக்கு மலேசியாவை அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

மலேசிய அருங்காட்சியகத்திலும் சுற்றுப்பயணிகளுகாக சில வழிகாட்டுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் பொறுமையாக பதில் சொல்வார்கள்.

6- கலை மற்றும் கலாச்சார விழா 2007

மலேசியா முழுதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் விழா. மலேசிய வாழ் மக்களின் கலை மற்றும் கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் நீங்கள் கண்டுக் களிக்கலாம். மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவர்கள் மலாய், சீன இந்தியர்கள் என்று மட்டுமே சிலருக்கு தெரியும். ஆனால், இபான், கடஜான், பாபா டான் ஞோஞ்ஞா மற்றும் பல சிறும்பான்மை இனத்தவர் இருப்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். அவைகளை அறிய இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.


7- மலேசிய உணவு திருவிழா 2007 (Malaysia Food Festival 2007)

குவாலா லும்புரில் உள்ள மிக முக்கியமான மூன்று ஷாப்பிங் காம்ப்ளேக்ஸான கே.எல்.சி.சி (KLCC), 1 உத்தாமா (1 Utama) மற்றும் சன்வே பிரமிட் (Sunway Pyramid)-இல் நடைப்பெறுகிறது. மலேசியாவில் உள்ள அனைத்து விதமான உணவு வகைகளும் இங்கே நீங்கள் சுவைத்து பார்க்கலாம். பல உணவு வகைகள் அங்கே உங்கள் முன்னே சமைத்தும் காட்டப்படும். இந்திய, மலாய், சீனர், பாபா டான் ஞோஞ்ஞா, இபான், கடஜான் மற்றும் பல இனத்தவரின் உணவுகளும் ஒரே இடத்தில் சுவைக்க வேண்டுமா? நீங்கள் போக வேண்டியது:

10-12 ஆகஸ்ட் - KLCC
17-19 ஆகஸ்ட் - 1 Utama
24-26 ஆகஸ்ட் - Sunway Pyramid

8- மெர்டேக்கா மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

இந்த் 25 ஆகஸ்ட் 2007-ஆம் ஆண்டு சந்திப்பில் மலேசிய அரசாங்க மற்றும் தனியார் உயர்க்கல்வி மாணவர்கள் கலந்துக்கொள்வார்கள். இனம் மற்றும் நாட்டுப்பற்று இவர்களிடம் வளர்க்கவே நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய சந்திப்பு நடத்தப் படுகிறது.

9- தேசப்பற்று பாடல் இயக்கி / பாடும் போட்டி

நீங்கள் ஒரு இசையமைப்பாளரா? நன்றாக கவிதை எழுதுவீர்களா? நல்ல குரல் வளம் இருக்கின்றதா? சேருங்கள் இந்த போட்டியில்.. ஆனால், பாடல் மலாயில்தான் இருக்க வேண்டும். :-)

10- உலக சிங்க நடன விழா 2007
இங்கே எத்தனை பேர் சிங்க நடனத்தைப் பார்த்திருக்கீங்க?கெந்திங்கில் 3-5 ஆகஸ்ட் நடந்த சிங்க நடனத்தில் உலகில் பல நாடுகளிலிருந்து பலர் வந்து கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதுவரை மலேசிய சிங்க நடனங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஆனால், மற்ற நாடுகளில் உள்ள வித்தியாசக்ங்களும் இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

11- அனைத்துலக வானவேடிக்கை போட்டி 2007

வானவேடிக்கை என்றால் யாருக்குதான் பிடிக்காது? எல்லாரும் ரசித்து பார்க்க கூடிய ஒன்று. அதுவே இங்கே திருவிழாப்போல் நடக்கிறது. புத்ராஜெயா, தித்திவங்ஸா, குவாலா லும்புர் மற்றும் போர்ட் டிக்ஸனில் 4,11,18,25 மற்றும் 30 இரவு வானமே வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும் அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க தவறாதீர்கள்.

12- அம்பாங் மெர்டேக்கா

இது சுதந்திர தின கவுண் டவுன் என்றும் சொல்லலாம். டாத்தாரான் மெர்டேக்காவில்தான் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. அதன் பின், ஒவ்வொரு வருடமும் 30 ஆகஸ்ட் இரவு இங்கே கவுண் டவுன் எண்ணப்படும். மலேசியாவில் பல இடத்தில் கவுண் டவுன் செய்தாலும், டாத்தாரானில் உள்ள அந்த சூழலுக்கு ஈடாகுமா?

13- சுதந்திர தின அணிவகுப்பு

அரசாங்க, தனியார், தற்காப்பு படை மற்றும் பல அணிகளின் அணிவகுப்பு. இது 31 ஆகஸ்ட் காலை மலேசிய ராஜாவின் தலைமையில் நடக்கும். காலை 7.30க்கு ஆரம்பமாகும் இந்த அணிவகுப்பு நண்பகல் 12 மணிக்கு முடிவடையும். நமது நாட்டின் தற்காப்பு படைகளுக்கு மரியாதை செலுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

14- மெர்டேக்கா திருவிழா

31 ஆகஸ்ட் இரவு ஸ்டேடியம் மெர்டேக்காவில் நடைப்பெற விருக்கிறது இந்த நாடகம். சுத்ந்திர போராட்டத்தை இந்த நாடகத்தில் அழகாக சித்தரிக்க விருக்கின்றனர். நுழைவு இலவசம்.

15- கான்ஸர்ட் அனாக் மலேசியா 2007 (Son of Malaysia Concert)

சுதந்திர தினத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் முழுதும் இஸ்தானா புடாயவில் (Istana Budaya) கலைநிகழ்ச்சிகள் நடைப்பெறும். ஆனால், இந்த கலநிகழ்ச்சிகள் மலேசியாவை பற்றியும், மலேசிய சுதந்திரத்தை பற்றியும், மலேசியாவில் வாழும் மக்களை பற்றியுமாக இருக்கும்.

திருவிழாதான்.. முப்பது நாளும் திருவிழாதான். எங்களுடன் கலந்து சுதந்திர தினத்தை கொண்டாட அழைக்கிறோம் நண்பர்களே! :-)

Saturday, July 21, 2007

என்ன"லா" தமிழ் இது??

என் அருமை தமிழ் நெஞ்சங்களே!!(எல்லாம் பாசம்,கண்டுக்கதீங்க)

எல்லாரும் மை ஃபிரண்ட் அக்காவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டீங்களா?சரி இன்று நான் எழுத போவது எங்கள் ஊர் 'லா' தமிழைப் பற்றி...

சில வருடங்களுக்கு முன்பு நான் பேச ஆரம்பித்தலே எனது இந்திய நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

"எப்படி'லா' இருங்கீங்க"
"கையீ(guy) ஜோக்கா(joke) பேசு'லா'"

இப்படி எல்லாம் சற்று அதிகமாக பேசி இருக்கின்றேன்.நான் 'லா' என்று பேச ஆரம்பித்தலே எனக்குக் கிடைப்பது கிண்டலும் கேலியும்தான்.ஆகவே முடிந்த வரையில் "லா" என்பதைப் பயன்படுத்தமால் இருப்பேன்.இப்பொழுது எல்லாம் நான் பேசும் தமிழில் 'லா' என்ற வார்த்தையே அதிகம் வருவது இல்லை.இதை வைத்தே எனது சிங்கப்பூர் தமிழ் நண்பர்கள் நான் தமிழ் நாட்டிலிருந்து வந்து இருக்கின்றேன் என்று முடிவு கட்டி விட்டார்கள்.'லா'தமிழின் மகிமையை பாருங்கள்.இதை வைத்தே யார் எந்த நாட்டு தமிழர் என்று தீர்மானித்து விடுகின்றார்கள்.



என்னிடம் பலர் கேட்கும் கேள்வி அது என்ன கடைசியில் 'லா' என்று சேர்த்துக் கொள்கின்றீர்கள்?அது என்ன தமிழ் மொழியா?இது எப்படி வந்தது?இன்று அதைப் பற்றி உங்களுக்கு சொல்கின்றேன்.

மலாய் மொழியில் பேசும் பொழுது 'லா' என்பதை கடைசியாக இணைத்துக் கொள்வார்கள்.
இது அந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க பயன்படுத்துவார்கள்.இப்பொழுது மலாய் மொழியில் உள்ளே வா என்பதற்க்கு மாசூக்( masuk).வரச் சொல்லியும் வரமால் இருந்தால் மாசூக்'லா' என்பார்கள்.நாங்கள் இந்த நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக இருக்கின்றோம்.எப்படியோ கொஞ்சம் மலாய் மொழியும் தமிழ் மொழியோடு கலந்து விட்டது.தமிழ் மொழி மட்டும் இல்லை,இது எங்கள் ஊர் ஆங்கிலத்தோடும் கலந்து விட்டது.எங்கள் ஊர் ஆங்கிலத்தை "Manglish" என்பார்கள்.



தமிழ் நாட்டிலில் இடத்துக்கு இடம் தமிழ் மொழி பேசுவது மாறுப்படும் பொழுது,நாட்டிக்கு நாடு மாறதா என்ன?இதுதான் 'லா' தமிழுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்.சில சமயம் வெறும் 'லா' மட்டும் தமிழில் வராது.கூடவே சில மலாய் வார்த்தைகளும் கலந்து வந்துவிடும்.நான் சில சமயம் இப்படி கலப்பட தமிழ் பேசினால் எல்லாரும் முழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அப்புறம்தான் ஞாபகம் வரும் நான் பேசியது மலாய் வார்த்தை.சரி நான் கிளம்புகின்றேன்'லா'.அடுத்த பதிவில் சந்திப்போம்.

மலேசியாவில் ஒரு முக்கியமான நாள்

நம்ப "கும்மி குவின்"






"காமெடி வெடி"




"ஆப்புகளின் அரசி"







"நம்ப எல்லாருக்கும் அக்கா"









"எல்லாருக்கும் தோழி"








"மலேசியா மாரியாத்தா part 1"








"நம்ப தமிழ் மணத்தின் பிரபலமான மலாய் ஆசிரியை"






"மலேசியாவில் மிகப் பிரபலமான விஐபி"






யாருல்'லா அது???






"மேலே சொன்ன அனைத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.அது எல்லாம் நம்ப மை ஃபிரண்ட் அக்காதான்.கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம்.எல்லாம் பாசத்தின் வெளிப்பாடு :)

நம்ப மை ஃபிரண்ட் அக்காவின் இனிய பிறந்த நாள் நாளை வருகின்றது"

எல்லாரும் அக்காவுக்கு மலாய் மொழியில் வாழ்த்து சொல்லுறது எப்படி என்று பார்ப்போமா?



"செலமாட் ஹாரி ஜாடி"
(selamat hari jadi)




"பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா"

side bar இல் ஒரு count down counter தெரிகின்றதா?எல்லாம் நம்ப மை ஃபிரண்ட் அக்காவின் பிறந்த நாளுக்கு மிஞ்சி இருக்கும் நேரங்கள்தான்.எல்லாரும் மறக்கமால் அக்காவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்....

Monday, July 16, 2007

யாரு"லா" பழங்களின் அரசி???!

வணக்கம் நண்பர்களே,
போன பதிவில் “மலேசியா பழங்களின் அரசன் டுரியான்” பற்றி பல சுவையான தகவல்களை அறிந்து கொண்டோம்.நாரதர் கலகம் மாதிரி அனைவரும் புது புது தகவல்கள் தந்து எங்களை எல்லாம் கதி கலங்க செய்து விட்டீர்கள்.ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல இந்த கலகத்திலிருந்து நம்மால் பல புது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆனால் எல்லாரும் நான் கேட்ட கேள்வியை மறந்து நீங்கள் பல கேள்விகளை டுரியான் பழத்தைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்.

நான் கேட்ட கேள்வி
“பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?”

கடைசி வரையில் யாருமே பதில் சொல்லவில்லை.அந்த துக்கத்தில் நான் 3 மாதமாக சாப்பிட்டவில்லை,தூங்கவில்லை, என்று பொய் சொல்ல மாட்டேன்.யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் உங்களை நான் விட போவது இல்லை,போன தடவை நம் Hero டுரியானைப் பற்றி அறிந்து கொண்டோம்,இம்முறை Heroine மங்குஸ்தீன் பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பழங்கள் அரசி மங்குஸ்தீன் எப்படி இருக்கும்?










படத்தைப் பார்த்தீர்கள் இல்லையா?இதுதான் அரசியார் மங்குஸ்தீன் அவர்கள் email blacklist check



இந்த பழத்தின் தனிதன்னமை வாய்ந்த சுவைக்காக இதற்கு பழங்களின் அரசி மற்றும் "தேவலோக பழம்" என்று கூட அழைக்கப்பட்டது.மங்குஸ்தீன் பழம் தென் கிழக்கு ஆசியாவில் வளரும் ஒரு வகை பழம்(tropical fruit).டுரியான் பழம் குளிர்ச்சி என்றால்,மங்குஸ்தீன் பழம் வெப்ப தன்மையை கொடுக்கும் என்று நம்படுகின்றது.


இதற்கும் விக்டோரியா மகாராணிக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.அது எப்படி என்றால் விக்டோரியா மகாராணி இந்த பழத்தைப் பற்றி கேள்விப்பட்டு இதை கொண்டு வருபவர்களுக்கு அந்நாட்டின் உரிய பட்டமான "வீரத்திருத்தகைப் பட்டம்"(knighthood) அளிப்பதாக வாக்குறுதி தந்தாராம்.ஆனால் யாராலும் இந்த பழத்தை கொண்டு வரமுடியவில்லை.இந்த பழத்தை வாரக்கணக்கில் கடுமையான தட்பவெட்ப சூழ்நிலை மாற்றங்களில் இருக்க முடியதினால்,இதை இங்கிலாந்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்று ஒரு கதை இருக்கின்றது.இந்த பழங்கள் தென்கிழக்கு ஆசியாவின் தட்ப வெப்ப நிலைகளில் தான் இருக்க முடியும்.இங்கிலாந்து அரசியே விரும்பி கேட்ட பழம் என்பதால் அதற்கு பழங்களின் அரசி என்ற பெயர் வந்தது என்று சொல்கின்றார்கள்.இந்த கதையில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஆனால் கதை நன்றாக இருக்கின்றது இல்லையா?








மங்குஸ்தீன் பழத்தின் வெளித்தோற்றம்









பழத்தின் உள் தோற்றம்.பழங்கள் டுரியானைப் போல சுளைகளாக இருக்கும்.ஆனால் வெண்மையான சுளைகள்.உள்ளே சிறிய கொட்டைகள் இருக்கும்.ஒரு மங்குஸ்தீன் பழம் ஆரஞ்சு பழத்தின் அளவிற்கு இருக்கும்.





இந்த பழத்தின் சுவை இனிப்பும்,கொஞ்சம் துவர்ப்பும் மற்றும் புளிப்பும் கலந்து இருக்கும்.இந்த பழங்களைச் சிறு வயதில் சாப்பிடும் பொழுது அம்மாவிடம் பல முறை அடிவாங்கி இருக்கின்றேன்.அது இந்த பழங்களை உரித்து சாப்பிடும் பொழுது அதன் தோல்களில் இருந்து வரும் ஒரு வகை சாறு சட்டைகளில் பட்டால் கறை படிந்து விடும்.இந்த கறைகள் எல்லாம் போக்கவே முடியாது.அம்மா மங்குஸ்தீன் பழம் வாங்கி வந்தால் பழைய சட்டை எல்லாம் தேடி கண்டுப்பிடித்து,அதை அணிந்துக் கொண்டு சாப்பிடும் அளவிற்கு எல்லாம் பொறுமைசாலி நான் இல்லை.எப்படிதான் கவனமாக சாப்பிட்டாலும் சட்டையில் கறைப்படியும்,அம்மாவிடம் அடியும் கிடைக்கும்email blacklist check(இது எல்லாம் அரசியலில் சாதாரணம்ப்பா)



மங்குஸ்தீன் மரங்கள் பழங்களைக் கொடுக்க 7லிருந்து 9 வருடங்கள் ஆகும்.ஆனால் அதன் பிறகு சில மரங்கள் 100 வருடம் வரை பழங்களைக் கொடுக்குமாம்!!!!!!




6 மாதத்தில் மங்குஸ்தீன் செடிகள்








2 வருடத்தில்...




6வருடங்களில்




பூவாகி.....காய் ஆகும் பழம்





பழம் இப்பொழுது நன்றாக தெரிகின்றது.அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பூப் போன்று இருக்கின்றதே...தெரிகின்றதா?அதை வைத்து பழத்தின் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ளலாம்.இந்த பழத்தின் உள்ளே ஒரு 6 சுளைகள் இருக்கும். இதைப் பார்த்து அதிக சுளைகள் உள்ள பழத்தை நாம் தேர்ந்து எடுக்கலாம்.






பழமாகும் காய்




பழுத்த பழம் ஊதா நிறத்தில் இருக்கும்....

சரி இப்பொழுது முக்கியமான விஷயம்.மங்குஸ்தீன் பழத்தை எப்படி சாப்பிடுவது?(வாயால் தான் என்று என்னை மாதிரி அறிவு ஜீவிகள் கிண்டல் பண்ண வேண்டாம்.)



மங்குஸ்தீன் பழத்தைக் கைகளாலே உரித்து சாப்பிடலாம்.பழத்தை மேசை மேல் வைத்து,அதை உள்ளங்கையால் அமுக்கினால் பழம் பிளக்கும்.இந்த மாதிரி வீர சாகசம் செய்து உங்கள் வலிமையைக் காட்ட முடியவில்லை என்றால் சிறு கத்தியைக் கொண்டு பழத்தை பிளக்கலாம்.பழத்தின் மேற்புறத்தில் 1cm அளவிற்கு குறைவாக பழத்தைச் சுற்றி வெட்டவும்.மிகவும் ஆழமாக வெட்ட வேண்டாம்.இப்படி செய்தால் பழம் இரண்டு பிரிவாக பிரியும்.(கீழே உள்ள படத்தைப் பாருங்கள்).ஆனால் கவனம் தேவை.நான் முன் சொன்னது போல இந்த பழங்களில் சாறு பட்டால் அந்த கறை போகாது.நான் எல்லாம் என்றைக்குமே இந்த பழங்களை உரித்தது இல்லை.அதற்குதான் அம்மாவும் அண்ணாவும் இருக்கின்றார்களே.என் நல்ல சட்டையில் அழுக்கு படிய கூடாது.இது மாதிரி யாரவது கிடைத்தால் அவர்களிடமே இதை உரித்து தர சொல்லுங்கள்.ஹிஹி.சின்ன வயதில் வாங்கிய அடியால் இப்படி ஆகிவிட்டேன்.





உள்ளே இருக்கு கொட்டை கடினமாக இருக்காது.ஆனால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.மிகவும் கசப்பாக இருக்கும்.நன்கு பழுத்த பழங்கள் தான் இனிப்பாக இருக்கும்.காயாக இருப்பது சற்று துவர்ப்பும் புளிப்பும் கலந்து இருக்கும்.பழங்கள் ஊதா நிறத்தில் இருக்கும் பழங்களையே தேர்ந்து எடுக்கவும்.மங்குஸ்தீன் பழங்களைக் குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாது.வாங்கிய சில நாட்களிலேயே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.











மேலும் விபரங்களுக்கு: http://www.hort.purdue.edu/newcrop/morton/mangosteen.html#Food%20Uses
நன்றி
http://ezinearticles.com/?Mangosteen---The-Queen-of-Fruits&id=94295
email blacklist check
சென்று வருகின்றேன் நண்பர்களே!!!
இது எந்த கலகத்தில் முடிய போகின்றதோ..நாரயணா நாரயணா!